Posts

Showing posts from November, 2024

முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்

  மூக்கன் என்ற திருடன், ஆடு திருட செல்கிறான். கூத்து கலையை முறைப்படி அறிந்தவன். கூத்தில் எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று நினைக்கும் போது பாட்டை மறந்து விட்டு கல்லடி வாங்கிய பெரிய கலைஞர்கள் உள்ளனர் என்று அவர் ஆசிரியர் சொல்லியிருப்பது நினைவிற்கு வருகிறது. திருட்டிலும் அவ்வாறுதான், எதாவது பிசகினால் கொலை செய்யப்பட்டு சங்கிலிகருப்பனின் பரிவாரங்களில் ஒன்றாக இருப்போம் என்கிறார். அவனது அன்றைய களவில் எதிர்பாராமல் தெருநாய் ஒன்றால் பிடிபடும் மூக்கன் தப்பிப்பிழைத்து சைக்கிள் வைத்த திசை மறந்து ஓடுகிறான். அந்த நள்ளிரவில் நீண்ட நேரம் ஓடி பொட்டலில் இருக்கும் நீரற்ற கிணற்றில் விழுகிறான். விழும்போது அவனது நினைவு பிசகி குறைக்கும் நாயும், தனது இருண்ட அறையில் கதவு ஜன்னல்களை திறக்க முடியாமல் தனித்தும், ஆழத்தில் அமிழ்ந்து கொண்டே மணலால் மறைந்து போவதாகவும் தோன்றுகிறது. பின்பு நினைவு தெளிந்து தப்பிக்கும் முயற்சியில் சக்திகளை இழந்து உரக்க கத்தி கூப்பிட வலுவற்று உள்ளே இருக்கும் நாயின் எலும்பில் சீழ்க்கை எழுப்பி, பயன்தராது மயங்குகிறான். அவனது அருகாமையில் ஒரு மெல்லிய கரிய கன்னியை காண்கிறான். வேலாள் என்ன...

கன்னியாகுமரி நாவல் வாசிப்பு அனுபவங்கள்

  கன்னியாகுமரி நாவல் இரண்டு பெரும் விசைகளின் உருவாக்கம். ஒன்று கோழைத்தனத்தால் சுயம் தீண்டப்பட்டு, கீழ்மைகளால் தன்னை நிரப்பிக்கொண்டு, அதனுடன் அவனது முதல் படத்தின் பெரு வெற்றியின் அகங்காரம் சேர்ந்துக் கொள்வது. அதனுடன் தன்னை வேலுத்தம்பியின் ரத்தமாக எண்ணிக்கொண்டு, ஆணின் பார்வையில் உருவாக்கிக் கொண்ட வரையறையில் பெண்ணை நிறுத்தி, இந்த ஆண்மைய சமூகத்திற்குள்ளாக அவளை உடல் மட்டுமாக எண்ணச் செய்து சிறுமை செய்வது. ஆனால் அவன் கலைஞனுமாக இருப்பதால், இந்த வரையறைக்குள் வைத்து வெல்லும் பெண்ணை உதறி தள்ளுபவனாகவும் இருக்கிறான். இரண்டாவது விமலா என்னும் விசை. அவள், ஆணின் வன்முறையால் அவமானப்படுத்தப்பட்டு, இந்த சமூக வெளி வரையறைகளின் எல்லைகளை உணர்ந்து, தற்கொலைக்கு முயன்று தோற்று, வழி தெரியாத பாதையில் அப்பாவின் மருத்துவக் கனவை அவளுக்கான மீட்பாகவும், பற்றுக் கோடாகவும் கொண்டு, பின்பு மேற்படிப்பில் ஆராய்சியின் போது அடையும் அறிதலின் இன்பத்திற்காக, இந்த பொது சமூக அமைப்பிலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொள்கிறாள். ஆனால் இது இருவிசைகளின் மோதலென்று தோன்றவில்லை. இதில் ரவி என்னும் விசை விமலாவுடன் மோத துடிக்கிறதே ஒழிய...

சிகண்டி வாசிப்பு குறிப்புகள்

நந்தி இலக்கிய வட்டத்தின் சார்பில் நடந்த சிகண்டி நாவல் காலந்துரையாடலுக்கான வாசிப்பு குறிப்புகளின் பதிவு. மலேசிய சௌவாட் நகரையும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளையும் கதைக்களமாக கொண்டு இருள் உலகை மிகத்தீவிரமாக சித்தரிக்கும் சிகண்டி நாவல் எனக்கும் முற்றிலும் அன்னியமான களம். ஆனால் நாவலில் நிரம்பி வழியும் நுணுக்கமான தகவல்களால் மிக அணுக்கமான அந்தரங்கமான வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள முடிந்தது என்றே நினைக்கிறேன். எட்டு போன்ற சௌவாட் ஒன்று மற்றும் இரண்டு. நடுவில் இருக்கும் மையமான சந்தை. அதனை ஒட்டிய இருட்டு சந்தை. கிழக்கில் இருக்கும் தைப் ரோடு மற்றும் காராட் பசார். மேற்கில் இருக்கும் சாகார் சாலையில் சன் விடுதி மற்றும் பாலியல் விடுதி. வடக்கில் இருக்கும் சீனர்களின் வளமையான பகுதியும் அங்கு இயங்கும் உணவகங்களும். தெற்கில் இருக்கும் பன்றி கொட்டகை மற்றும் அதை ஒட்டிய சிறு காடு என கண் முன் நிறுத்தி விடுகிறார். இத்தனை வரையறுக்க முடிந்ததாக இருந்தாலும் சௌவாட் காடு போல முளைத்துக்கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சௌவாட்டில் வசிக்கும் சீனா, தமிழ், பர்மா, வங்காளம், இந்தொனேசியா, தாய்லாந்து நாட்டின் மக்கள் கலவை. ...