புயலிலே ஒரு தோணி - வாசிப்பு
இரண்டாம் உலகப்போரின் காலத்தில் தமிழகத்திலிருந்து வெளி நாடுகளில் லேவாதேவி செய்யும் செட்டிகளின் உலகத்தை கதைக்களமாக கொண்ட நாவல். பல்வேறு விதமான நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் உலகை மிக நேர்த்தியாக சித்தரித்திருக்கிறார். வெவ்வேறு வகையான உச்சரிப்புகள் நிற வேறுபாடுகள் உணவுகள். பண்டியன் என்ற பெயரை பாண்டீன், பாந்தியான், பாண்டையன், பாவன்னா என்று விதவிதமாக உச்சரிக்கிறார்கள். இந்தோனேசீயர், மலாய், சீன, டச்சு, ஜப்பான், ஆங்கிலேயர், தாய்லாந்து, அமெரிக்கர், கேரளர், தமிழர்கள் என்று பல வித மனிதர்கள் அவர்களின் பேச்சு வழியாக வெளிப்படுகிறார்கள். தமிழிலேயே செட்டிநாட்டு தமிழ், மதுரை, திருப்பத்தூர், சங்க தமிழ், விபசாரிகளின் தமிழ் என்று பல வகையில் மிகவும் செறிவாக அமைந்துள்ளது. பாண்டியன் என்ற ஒரே ஒரு மைய கதாபாத்திரத்தை வைத்து நாவல் பயணிக்கிறது. அவனைச் சுற்றி மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் வேக வேகமாக நகர்ந்து செல்கின்றன. அவனது வாழ்க்கையில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் ஒரே அளவிலான முக்கியத்துவத்துடன் சொல்லப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எந்த கதாமாந்தர்களும் சில பக்கங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. எந்த ...