Posts

Showing posts from March, 2025

புயலிலே ஒரு தோணி - வாசிப்பு

  இரண்டாம் உலகப்போரின் காலத்தில் தமிழகத்திலிருந்து வெளி நாடுகளில் லேவாதேவி செய்யும் செட்டிகளின் உலகத்தை கதைக்களமாக கொண்ட நாவல். பல்வேறு விதமான நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் உலகை மிக நேர்த்தியாக சித்தரித்திருக்கிறார். வெவ்வேறு வகையான உச்சரிப்புகள் நிற வேறுபாடுகள் உணவுகள். பண்டியன் என்ற பெயரை பாண்டீன், பாந்தியான், பாண்டையன், பாவன்னா என்று விதவிதமாக உச்சரிக்கிறார்கள். இந்தோனேசீயர், மலாய், சீன, டச்சு, ஜப்பான், ஆங்கிலேயர், தாய்லாந்து, அமெரிக்கர், கேரளர், தமிழர்கள் என்று பல வித மனிதர்கள் அவர்களின் பேச்சு வழியாக வெளிப்படுகிறார்கள். தமிழிலேயே செட்டிநாட்டு தமிழ், மதுரை, திருப்பத்தூர், சங்க தமிழ், விபசாரிகளின் தமிழ் என்று பல வகையில் மிகவும் செறிவாக அமைந்துள்ளது. பாண்டியன் என்ற ஒரே ஒரு மைய கதாபாத்திரத்தை வைத்து நாவல் பயணிக்கிறது. அவனைச் சுற்றி மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் வேக வேகமாக நகர்ந்து செல்கின்றன. அவனது வாழ்க்கையில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் ஒரே அளவிலான முக்கியத்துவத்துடன் சொல்லப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எந்த கதாமாந்தர்களும் சில பக்கங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. எந்த ...

வாடிவாசல் - சி சு செல்லப்பா - குறு நாவல் வாசிப்பு

விவசாயம் செய்து கூட்டமாக வாழத்துவங்கிய மனிதனுக்கு, விலங்குகளை பழக்கி உபயோகப் படுத்திக் கொள்வது நாகரீகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும். விவசாய வேலைகளுக்கும் பயணத்திற்கும் பெரிய அளவில் காளைகள் உதவியிருக்கும். மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு மனிதனை விட மாடுகள் அதிகமாக உழைத்திருக்கும் என்று கூட தோன்றுகிறது. காளையை அடக்குதல் என்பது வன விலங்காக இருந்த காளையை அடக்கி பழக்குதலின் வழியாக இருந்திருக்கும். அந்த காலத்தில் காளையை அடக்குபவனின் வீரம் பெரிதும் போற்றுதலுக்கு உரியதாகவும் அதன் வழியே அவன் செல்வம் மற்றும் அதிகாரத்தினை அடைபவனாகவும் இருந்திருப்பான். நமது நாட்டில் காணப்படும் குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதலை கண்டு அச்சமடைபனை மகளிர் வெறுக்கும் சித்திரத்தின் வழியே ஜல்லிக்கட்டின் தொடர்ச்சியையும் அதன் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. குடிகளுக்கு இடையேயான போர்களில் ஆநிறை கவர்தல் முக்கிய இடம் வகித்ததையும் அறிய முடிகிறது. வீரம் என்பது செல்வமாகவும் அதிகாரமாகவும் இருந்த காலத்திலிருந்து அதன் பிறகான கால கட்டத்தில் உருவாகி வந்திருக்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் தொல் ...