Posts

அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பு - வாசிப்பு

  நான் சமீபத்தில் படித்த மிக திருப்தியளித்த தொகுப்பு இது. தத்துவமும், யோகமும், அறியிவியலும் தொன்மங்களையும் கொண்டு தனது அனுபவங்களையும் தேடல்களையும் கேள்வியாகவும் கதைகளாகவும் மாற்றியிருக்கிறார். மொழியின் கூர்மையும் தேர்ந்திருக்கும் வடிவமும் கதையை இன்னும் ஆழமாக மாற்றியிருக்கிறது. என்னுடைய வாசிப்பில் இத்தகைய ஆழம் கொண்ட சிறுகதைகள் மிக மிக அரிதானவை. மிக முக்கியமான புத்தகத்தின் வழியே தன் வருகையை வலுவாக அறிவித்திருக்கிறார் சுனில். அபாரமான மொழி ஆளுமை வெளிப்படுகிறது, அவரது விவரணைகள் மிக கூரியவையாக வாசிப்பவருக்கு உணர்வுகளை ஆழமாக கடத்தி விடுகிறது. வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் க...

புயலிலே ஒரு தோணி - வாசிப்பு

  இரண்டாம் உலகப்போரின் காலத்தில் தமிழகத்திலிருந்து வெளி நாடுகளில் லேவாதேவி செய்யும் செட்டிகளின் உலகத்தை கதைக்களமாக கொண்ட நாவல். பல்வேறு விதமான நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் உலகை மிக நேர்த்தியாக சித்தரித்திருக்கிறார். வெவ்வேறு வகையான உச்சரிப்புகள் நிற வேறுபாடுகள் உணவுகள். பண்டியன் என்ற பெயரை பாண்டீன், பாந்தியான், பாண்டையன், பாவன்னா என்று விதவிதமாக உச்சரிக்கிறார்கள். இந்தோனேசீயர், மலாய், சீன, டச்சு, ஜப்பான், ஆங்கிலேயர், தாய்லாந்து, அமெரிக்கர், கேரளர், தமிழர்கள் என்று பல வித மனிதர்கள் அவர்களின் பேச்சு வழியாக வெளிப்படுகிறார்கள். தமிழிலேயே செட்டிநாட்டு தமிழ், மதுரை, திருப்பத்தூர், சங்க தமிழ், விபசாரிகளின் தமிழ் என்று பல வகையில் மிகவும் செறிவாக அமைந்துள்ளது. பாண்டியன் என்ற ஒரே ஒரு மைய கதாபாத்திரத்தை வைத்து நாவல் பயணிக்கிறது. அவனைச் சுற்றி மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் வேக வேகமாக நகர்ந்து செல்கின்றன. அவனது வாழ்க்கையில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் ஒரே அளவிலான முக்கியத்துவத்துடன் சொல்லப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எந்த கதாமாந்தர்களும் சில பக்கங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. எந்த ...

வாடிவாசல் - சி சு செல்லப்பா - குறு நாவல் வாசிப்பு

விவசாயம் செய்து கூட்டமாக வாழத்துவங்கிய மனிதனுக்கு, விலங்குகளை பழக்கி உபயோகப் படுத்திக் கொள்வது நாகரீகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும். விவசாய வேலைகளுக்கும் பயணத்திற்கும் பெரிய அளவில் காளைகள் உதவியிருக்கும். மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு மனிதனை விட மாடுகள் அதிகமாக உழைத்திருக்கும் என்று கூட தோன்றுகிறது. காளையை அடக்குதல் என்பது வன விலங்காக இருந்த காளையை அடக்கி பழக்குதலின் வழியாக இருந்திருக்கும். அந்த காலத்தில் காளையை அடக்குபவனின் வீரம் பெரிதும் போற்றுதலுக்கு உரியதாகவும் அதன் வழியே அவன் செல்வம் மற்றும் அதிகாரத்தினை அடைபவனாகவும் இருந்திருப்பான். நமது நாட்டில் காணப்படும் குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதலை கண்டு அச்சமடைபனை மகளிர் வெறுக்கும் சித்திரத்தின் வழியே ஜல்லிக்கட்டின் தொடர்ச்சியையும் அதன் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. குடிகளுக்கு இடையேயான போர்களில் ஆநிறை கவர்தல் முக்கிய இடம் வகித்ததையும் அறிய முடிகிறது. வீரம் என்பது செல்வமாகவும் அதிகாரமாகவும் இருந்த காலத்திலிருந்து அதன் பிறகான கால கட்டத்தில் உருவாகி வந்திருக்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் தொல் ...

புலிக்கட்டம் சிறுகதை - எஸ் ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்

புலிக்கட்டம் சிறுகதையின் துவக்கத்தில் களவாட சென்று ஓடு உடைந்து வீட்டுக்குள் விழும் திருடனை ஊர்க்காரர்கள் சேர்ந்து புங்க மரத்தில் கட்டி வைக்கின்றனர். அன்று இரவு முழுவதும் கொட்டும் பனியில் பசி மயக்கத்தில் கிறங்கி நிற்கும் அவனது எண்ண ஓட்டங்களும், கிராம வாசிகளின் முன்பே ஒருமுறை திருடனை பிடித்து அவனை கட்டி வைத்ததால் இறந்து போன உறுத்தலும் சந்திக்கும் புள்ளி தான் கதையாகிறது. கன்னம் ஒட்டிய ஒடிசலான இந்த திருடனை, திருடன் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி உருக்குலைந்து இருப்பவன் எதையாவது திருடி வீட்டிற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருட சென்று பிடிபடுகிறான். அவனது குழந்தையில்லா மனைவியின் நினைவுகளும், அவளது பெட்டியில் இருக்கும் வாடிய தாழம்பூவின் நினைவுகளும் உருவாகிறது. பின்பு சிறு வயதில் அவனது அப்பாவினோடு கீதாரிகள் வரும் சமயங்களில் அவர்களோடு சென்று தங்கிய நினைவுகளும், அவர்களில் ஒருவனோடு அப்பா ஆடிய ஆடு புலி ஆட்டமும் நினைவிற்கு வருகிறது. அந்த ஆடு புலி ஆட்டத்தில் வரிசையாக புலியை நகர விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதால் கோபமுறும் அவனது தந்தை, நள்ளிரவில் இடுப்பிலிருக்கும் கத்தியை ...

விஷக்கிணறு- சுனில் கிருஷ்ணன்

விஷக்கிணறு குறுநாவல் மீதான எனது வாசிப்பு. நான்கு பகுதிகளை கொண்ட குறு நாவலின் ஒவ்வொரு பகுதியும் மிக கூர்ந்த வாசிப்பை கோருவது எண்ணற்ற வாசிப்பு சாத்தியங்களை வாசகருக்கு அளிப்பதாக இருக்கும் என தோன்றுகிறது. இதன் முதல் பகுதியில் வரும் மனைவியின் தற்கொலையால் மனம் வருந்தும் முதியவர். மனைவியின் தற்கொலையும் அதன் மீதான வழக்கும், மனைவியின் மெளனமும் மிகவும் பாதித்து அவரது மனைவியிடம் மன்னிப்பை கோரும் அவரது ஆத்மா. அவரது சந்தோஷ தருணங்களை தன் மரணத்துடன் எடுத்து சென்று விட்டது போல் அவரை விடாமல் துரத்தும் பழைய துர் நிகழ்வுகளின் நினைவுகள், அவரை ஆழ் கிணற்றில் விழ செய்து கொண்டிருக்கிறது. மெலாவாத்தி மலையில் வரும் தண்டனைக் கிணறு படிமமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பகுதி கதைக்குள் உள்ள உள்கதையில் வரும் குரங்கு கூட்டத்தினை கிணற்றில் விஷம் வைத்து கொள்ளும் நிகழ்வு, ஒரு மரபான இந்திய மனம் எவ்வாறு இந்த மனித மனதின் கொடூரத்தை எதிர் கொள்கிறது என்று சொல்வதாக புரிந்து கொண்டேன். அதன் வழியாக அவரும் அவரது சந்ததிகளும் ஒரு விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது. இரண்டாவது பகுதியில் ஒரு தொன்மக் கதை சொல்லப்படுகிறது. இறையின் தீங்கனா...

முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்

  மூக்கன் என்ற திருடன், ஆடு திருட செல்கிறான். கூத்து கலையை முறைப்படி அறிந்தவன். கூத்தில் எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று நினைக்கும் போது பாட்டை மறந்து விட்டு கல்லடி வாங்கிய பெரிய கலைஞர்கள் உள்ளனர் என்று அவர் ஆசிரியர் சொல்லியிருப்பது நினைவிற்கு வருகிறது. திருட்டிலும் அவ்வாறுதான், எதாவது பிசகினால் கொலை செய்யப்பட்டு சங்கிலிகருப்பனின் பரிவாரங்களில் ஒன்றாக இருப்போம் என்கிறார். அவனது அன்றைய களவில் எதிர்பாராமல் தெருநாய் ஒன்றால் பிடிபடும் மூக்கன் தப்பிப்பிழைத்து சைக்கிள் வைத்த திசை மறந்து ஓடுகிறான். அந்த நள்ளிரவில் நீண்ட நேரம் ஓடி பொட்டலில் இருக்கும் நீரற்ற கிணற்றில் விழுகிறான். விழும்போது அவனது நினைவு பிசகி குறைக்கும் நாயும், தனது இருண்ட அறையில் கதவு ஜன்னல்களை திறக்க முடியாமல் தனித்தும், ஆழத்தில் அமிழ்ந்து கொண்டே மணலால் மறைந்து போவதாகவும் தோன்றுகிறது. பின்பு நினைவு தெளிந்து தப்பிக்கும் முயற்சியில் சக்திகளை இழந்து உரக்க கத்தி கூப்பிட வலுவற்று உள்ளே இருக்கும் நாயின் எலும்பில் சீழ்க்கை எழுப்பி, பயன்தராது மயங்குகிறான். அவனது அருகாமையில் ஒரு மெல்லிய கரிய கன்னியை காண்கிறான். வேலாள் என்ன...

கன்னியாகுமரி நாவல் வாசிப்பு அனுபவங்கள்

  கன்னியாகுமரி நாவல் இரண்டு பெரும் விசைகளின் உருவாக்கம். ஒன்று கோழைத்தனத்தால் சுயம் தீண்டப்பட்டு, கீழ்மைகளால் தன்னை நிரப்பிக்கொண்டு, அதனுடன் அவனது முதல் படத்தின் பெரு வெற்றியின் அகங்காரம் சேர்ந்துக் கொள்வது. அதனுடன் தன்னை வேலுத்தம்பியின் ரத்தமாக எண்ணிக்கொண்டு, ஆணின் பார்வையில் உருவாக்கிக் கொண்ட வரையறையில் பெண்ணை நிறுத்தி, இந்த ஆண்மைய சமூகத்திற்குள்ளாக அவளை உடல் மட்டுமாக எண்ணச் செய்து சிறுமை செய்வது. ஆனால் அவன் கலைஞனுமாக இருப்பதால், இந்த வரையறைக்குள் வைத்து வெல்லும் பெண்ணை உதறி தள்ளுபவனாகவும் இருக்கிறான். இரண்டாவது விமலா என்னும் விசை. அவள், ஆணின் வன்முறையால் அவமானப்படுத்தப்பட்டு, இந்த சமூக வெளி வரையறைகளின் எல்லைகளை உணர்ந்து, தற்கொலைக்கு முயன்று தோற்று, வழி தெரியாத பாதையில் அப்பாவின் மருத்துவக் கனவை அவளுக்கான மீட்பாகவும், பற்றுக் கோடாகவும் கொண்டு, பின்பு மேற்படிப்பில் ஆராய்சியின் போது அடையும் அறிதலின் இன்பத்திற்காக, இந்த பொது சமூக அமைப்பிலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொள்கிறாள். ஆனால் இது இருவிசைகளின் மோதலென்று தோன்றவில்லை. இதில் ரவி என்னும் விசை விமலாவுடன் மோத துடிக்கிறதே ஒழிய...